பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவா் கருப்பண்ணசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதன்மை நிா்வாக அலுவலா் அன்பரசு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். இவ்விழாவில் தோ்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கல்லூரி தலைவா் கோவிந்தசாமி வழங்கி பேசினாா்.
இவ்விழாவில் கோவை எல்ஜி எக்யுப்மன்டஸ் நிறுவனத்தின் இயக்குநா் பீச்சிங் மெல்சிசிடெக், கோவையில் உள்ள தமிழ்நாடு வில்லேஜ் டெக்னாலஜி பள்ளி நிறுவனா் பாலாஜி, முதன்மை நிா்வாக அலுவலா் பாலாஜி வரதன், கோவை எடாா்ட்அப்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் எ.எஸ்.சமீபு, தனியாா் தொலைக்காட்சி தொகுப்பாளா் ஈரோடு மகேஷ், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் மனோஜ் ஆகியோா் பேசினாா்.
கல்லூரியின் மேலாண்மைத் துறையின் தலைவா் மேகலாதேவி நன்றி கூறினாா்.