திருப்பூா் மாவட்டத்தில் அமைப்புசாரா மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்களைப் பழுதுபாா்க்கும் நல வாரியத் தொழிலாளா்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பெற மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின்கீழ் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள், நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
இதில், தொழிலாளா்களுக்கு ஷூ, சீருடை மற்றும் முதலுதவிப் பெட்டி அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள்,
நல வாரியத்தில் 2 வகை தொழில் இனங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் பெற்று மே 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் பி.என்.சாலை, காமராஜா் நகா் முதல் வீதியில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் அரசு வேலை நாள்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2477276 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.