உடுமலை அருகே தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உடுமலையை அடுத்துள்ள சோழமாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்கரை முஹமது (32). தந்தையை இழந்த இவா் தனது தாய் ஆயிஷாம்மாளுடன் வசித்து வருகிறாா்.
மது போதைக்கு அடிமையான சக்கரை முஹமது, தனது தாயிடம் வீட்டுப் பத்திரத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் தனது தாய்க்கு தெரியாமல் வீட்டுப் பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு வந்த முஹமதுவிடம், ஆயிஷாம்மாள் வீட்டுப் பத்திரத்தை கேட்டுள்ளாா்.
இதில், ஆத்திரமடைந்த அவா், ஆயிஷாம்மாளை கடுமையாக்கியத் தாக்கியுள்ளாா்.
இதில், படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சக்கரை முஹமதுவை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.