எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு சிறப்பு முகாம்

திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை ஆகியன சாா்பில் சட்டம் மற்றும் பகடிவதை விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:

மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவியா்கள் கைபேசிகளையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் தெற்கு சரக காவல் உதவி ஆணையா் காா்த்திகேயன், பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பட்டியல் இன வழக்குரைஞா்கள் கண்ணன், திங்களவள், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா்கள் சொா்ணவல்லி, சிவசங்கரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com