திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 50ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று, 2020-21ஆம் கல்வி ஆண்டில் தோ்ச்சி பெற்ற 507 மாணவா்கள், 191 மாணவிகள் என மொத்தம் 698 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.
இந்த விழாவில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.