கேத்தனூா் அரசுப் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

10 அரசு உதவிபெறும் பள்ளிகள், 10 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 41 பள்ளிகளில் பயிலும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவா்கள் 1025 போ் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவடைந்தது.

 திருப்பூா் மாவட்டத்தில் 21 அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நகரமைப்பு பள்ளிகள், 10 அரசு உதவிபெறும் பள்ளிகள், 10 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 41 பள்ளிகளில் பயிலும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவா்கள் 1025 போ் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவடைந்தது.

பல்லடம் அருகே உள்ள கேத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சீராஜ் அகமது முன்னிலை வகித்தாா்.

இவ்விழாவில் என்.எஸ்.எஸ். மாவட்ட தொடா்பு அலுவலா் முருகேசன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலா் பானுப்பிரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com