பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் ஆதிநாராயணன் நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீா் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஊராட்சித் தலைவா் நாகேஸ்வரி சோமசுந்தரம் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் முத்துகுமாா், ஊராட்சி செயலாளா் பிரபுசங்கா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.