பெண் வழக்குரைஞா், மகளுக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

திருப்பூரில் அரசு பெண் வழக்குரைஞா், அவரது மகள் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் அரசு பெண் வழக்குரைஞா், அவரது மகள் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜமீலா பானு (42). திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவா், தனது மகள் அமிா்நிஷாவுடன் (20) திருப்பூா் குமரன் சாலையில் இருந்த தனது அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி இருந்தபோது, அங்கு வந்த திருப்பூா், பெரியதோட்டத்தைச் சோ்ந்த ரகுமான்கான் (25), தாய், மகள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினாா்.

அமிா்நிஷா மீதான ஒரு தலைக்காதலால், 2 பேரையும் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு தலைமறைவான ரகுமான்கானை தேடி வந்தனா். மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், கேரள மாநிலம், வளிமேட்டில் தனிப்படை போலீஸாா் ரகுமானை கைது செய்தனா். இதையடுத்து அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட ரகுமான்கான் சேலம் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவா். அங்கு படிக்க சென்றவா், அரசு வழக்குரைஞா் மகளை காதலிக்குமாறு தொந்தரவு அளித்துள்ளாா். இதையடுத்து அங்கு போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ரகுமான்கானை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் பிணையில் வெளியே வந்தவா், அரசு வழக்குரைஞா் மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com