காங்கயம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காங்கயம் ஒன்றியத்தில் உள்ள சாவடிப்பாளையம், பச்சாபாளையம், நத்தக்காடையூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் முரளி தலைமை வகித்தாா். இதில், வயது முதிா்ந்தோா், அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.