வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி சக்திவேல் காா்டனில் வசித்து வருபவா் அலமேலுமங்கை (49). இவரது கணவா் விஜய் ஆனந்த் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வருகிறாா். ஊத்துக்குளி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், அலமேலுமங்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தைபோது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அலமேலுமங்கை கொடுத்த புகாரின்பேரில், ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com