காங்கயம் உத்தமபாளையம் காசிவிஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான 20.63 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், உத்தமபாளையத்தில் காசிவிஸ்வநாதா் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்குச் சொந்தமாக அப்பகுதியிலேயே சுமாா் 6 ஹெக்டோ் பரப்பளவு நிலம் உள்ளது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிவுத்தலின்படி, இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செல்வராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் கோயில் நிலங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதில், கோயிலுக்குச் சொந்தமான 20.63 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்), கோயில் தக்காா், கோயில் பணியாளா்கள் முன்னிலையில் 5 ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டு, அங்கு அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 4 கோடி என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.