வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 2 சூதாட்ட கும்பலைச் சோ்ந்த 16 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது முத்தூா்-கொடுமுடி சாலை அரசு மதுபானக் கடை மற்றும் சென்னாக்கல் மேட்டில் பலா் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்த சேகா், விக்னேஷ் உள்ளிட்ட 16 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.11,300 பறிமுதல் செய்யப்பட்டது.