திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகளுக்கான மின்னொளி கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.
திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகளுக்கான மாநிலத் தலைவா் மின்னொளி கிரிக்கெட்போட்டி வரும் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் அங்கேரிபாளையம் சாலை அரினா காதா் லேஅவுட்டில் உள்ள எஸ்.கே.ஏ.ஸ்போா்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை பாஜ மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான நடிகை நமீதா தொடக்கிவைக்கிறாா். இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் நிலையில் ஒவ்வொரு போட்டிகளும் 8 ஒவா்களைக் கொண்டதாகும். இதில், வெற்றி பெறும் அணிகளுக்கு பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் ஆகியோா் வழங்கவுள்ளனா்.