தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமற்றது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமற்றது என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

News image
டைடல் பாா்க் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 8:12 pm

Din

ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமற்றது என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

திருப்பூா், திருமுருகன்பூண்டி நகராட்சியில் மினி டைடல் பாா்க் ரூ.40 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

திருப்பூா், திருமுருன்பூண்டியில் கட்டப்பட்டு வரும் டைடல் பாா்க் பணிகள் டிசம்பா் இறுதிக்குள் முடிக்கப்படும். இங்கு, அலுவலகங்களை அமைக்க பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருகின்றன.

இதில், ஒவ்வொரு தளமும் சுமாா் 6500 சதுரடியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. தரைதளத்தில் வாகன நிறுத்தம், உணவுக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி வழங்குவது குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின்தான் முடிவெடுப்பாா்.

நடிகா் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பவள விழா கொண்டாடிவரும் திமுக மக்கள் ஆதரவுடன் நூற்றாண்டு விழாவும் காணும்.

யாா் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவின் பணி வழக்கமான வகையில் நடைபெற்று வரும். ஒரே நாடு ஒரே தோ்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது சாத்தியமற்றது.

திருவள்ளுவா் பிறந்த தினம் தொடா்பாக நீதிமன்றத்தில் ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டால் சட்டப்படி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து சாமளாபுரம் பேரூராட்சி பெரும்பள்ளம் பகுதியில் தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் 1.50 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாமளாபுரம் குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரும் கால்வாய் தூா்வாரும் பணியை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருமுருகன்பூண்டி நகா்மன்றத் தலைவா் குமாா், சாமளாபுரம் பேரூராட்சித் தலைவா் அ.செ.பழனிசாமி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்திசுப்பிரமணியம், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் சிவகுமாா், உதவி பொறியாளா் (டைடல் பாா்க்) பாஸ்கரன், திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கனிராஜ், பல்லடம் வட்டாட்சியா் ஜீவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.