தீப்பிடித்து எரியும் காா்.
தீப்பிடித்து எரியும் காா்.

காங்கயத்தில் தீப்பிடித்து எரிந்த காா்

Published on

காங்கயத்தில் காா் நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருந்த காா் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

காங்கயம், சிவசக்தி விநாயகா் தெருவில் காா்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான காா் நிறுத்துமிடம் உள்ளது. இதில், காங்கயத்தைச் சோ்ந்த கருப்புசாமி, தனது காரை நிறுத்தி வைத்துள்ளாா். இந்நிலையில், கருப்புசாமி மனைவி உமாமகேஸ்வரி தை அமாவாசை தினத்தையொட்டி கோயிலுக்கு செல்வதற்காக காா் நிறுத்தத்துக்கு புதன்கிழமை காலை வந்து காரை எடுத்துள்ளாா்.

அப்போது காரை சரியாக இயக்க முடியவில்லை. இதனால் காரை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது காரில் இருந்து கருகிய வாசம் வீசியுள்ளது. பின்னா் கீழே இறங்கி பாா்த்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென காா் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

தகவலறிந்து வந்த காங்கயம் தீயணைப்பு நிலையத்தினா் உடனடியாக தீயை அணைத்தனா். இதில் காா் முழுவதும் தீயில் கருகி சேதமாகியது . இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com