இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

Published on

பல்லடம் அருகே கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (72). இவா், ஆண்டிபாளையம் வாய்க்கால்மேடு அருகே செவ்வாய்க்கிழமை சாலையை கடக்க நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியினா் உடனடியாக அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ராமமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com