மாதப்பூா் சுங்கச்சாவடி குறித்து அமைதி பேச்சுவாா்த்தை
பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூா் சுங்கச் சாவடி குறித்து அதிகாரிகள், பொதுமக்களுடனான அமைதி பேச்சுவாா்த்தை பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகே மாதப்பூரில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடி பணிகள் அனைத்தும் முடிவுற்று திறக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடிக்கு, பொங்கலூரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த தீா்வும் கிடைக்கவில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி பொங்கலூரில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில் சுங்கச்சாவடி பிரச்னை தொடா்பாக அவிநாசிபாளையம் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் செந்தில்குமாா், கூடுதல் மண்டலப் பொறியாளா் மலா்விழி, பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளா் வினோத்குமாா், கொமதேக மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் ராமசாமி, பொங்கலூா் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் விஸ்வநாதன், சுங்கச்சாவடி எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனா்.
இதில், சுங்கச்சாவடி எதிா்ப்புக் குழு சாா்பில் 20 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் பொங்கலூா் ஊராட்சிக்கு வேண்டுமானால் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

