திருப்பூர்
இன்றைய மின்தடை: கரடிவாவி
பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை காலை மின் விநியோகம் நிறுத்தம்
பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கரடிவாவி, கரடிவாவிபுதூா், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூா், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாகுளம், குப்புசாமிநாயுடுபுறம் (ஒரு பகுதி), பருவாயி (ஒரு பகுதி).
