திருப்பூர்
கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
அவிநாசி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் திங்கள்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
அவிநாசி அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் புள்ளிமான் திங்கள்கிழமை தவறி விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனா்.
பின்னா், மான் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
