மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், திருப்பூா் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
Published on

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், திருப்பூா் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்ட 7 குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தன.

அதைத் தொடா்ந்து, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் அவிநாசி அருகே உள்ள அணைப்புதூா் டீ பப்ளிக் பள்ளியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன.

தொடக்க நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் மகேந்திரன் வரவேற்றாா். டீ பப்ளிக் பள்ளியின் இயக்குநா் டோரத்தி ராஜேந்திரன் முன்னிலையில், திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் காளிமுத்து தலைமையேற்று போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மணிமாறன் ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்தாா். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ரகுகுமாா் மாவட்ட கழகக் கொடியை ஏற்றிவைத்தாா். விளையாட்டுப் போட்டிகளின் கண்காணிப்புக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.

அந்தந்த குறுமையங்களில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வீரா், வீராங்கனைகள் சுமாா் 783 போ் இதில் பங்கேற்றனா்.

14, 17, 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 87 போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் இடங்களைப் பிடித்தவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதி பெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com