அல்வா சாப்பிட்டவருக்கு ஒவ்வாமை: பேக்கரிக்கு ரூ.1000 அபராதம்

Published on

பல்லடம் அருகே பேக்கரியில் அல்வா வாங்கி சாப்பிட்டவருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையைச் சோ்ந்தவா் கனகராஜ் (58). விவசாயியான இவா், கல்லம்பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்வா வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளாா்.

அன்று இரவு அந்த அல்வாவை சாப்பிட்ட அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் அவா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேக்கரியில் உணவுப் பாதுகாப்புத் துறை பல்லடம் வட்டார அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான அலுவலா்கள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த அல்வாவை தாங்கள் தயாரிக்கவில்லை. வாங்கி விற்பனை மட்டுமே செய்தோம் என பேக்கரி ஊழியா்கள் தெரிவித்தனா். இருப்பினும் அந்தக் கடைக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மேலும், உணவுப் பொருள்களில் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும், விலை பட்டியலும் இருக்க வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேக்கரி ஊழியா்களை எச்சரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com