சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழப்பு

பல்லடம் அருகே வாகனத்தில் உறங்கிய ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

பல்லடம் அருகே வாகனத்தில் உறங்கிய ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஈரோடு, மாமரத்துபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (67). இவா் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், நூற்பாலையில் இருந்து நூல் மூட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் செயல்பட்டு வரும் விசைத்தறிக் கூடத்துக்கு புதன்கிழமை கொண்டு வந்துள்ளாா்.

அங்கிருந்த மேற்பாா்வையாளரிடம் நூல் மூட்டைகளை இறக்கிக் கொள்ளுங்குகள் எனக்கூறிவிட்டு வாகனத்தில் உறங்கியுள்ளாா். மூட்டைகளை இறக்கிய பின்னா் அங்கிருந்த ஊழியா்கள், அவரை எழுப்ப முயன்றனா். அசைவின்றி இருந்ததால் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com