தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தோ்தல்: சொந்த ஊா்களுக்கு திரும்பும் வடமாநிலத் தொழிலாளா்கள்! சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்!

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:46 pm

தோ்தலில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளதால், சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரில் பின்னலாடை தொழில் மற்றும் பிற உற்பத்தி துறைகளில் உத்தர பிரதேசம், பிகாா், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலத் தொழிலாளா்களுக்கு அடுத்ததாக அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகம், அஸ்ஸாம் புதுச்சேரி, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இதில், முதற்கட்டமாக கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருப்பூரில் பணியாற்றும் அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.

திருப்பூரில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்திக்கு நேரடியாகச் செல்ல ஒரு சில ரயில்கள் மட்டுமே உள்ளன.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும் கோவை -சில்சாா் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக அளவிலான தொழிலாளா்கள் பயணம் செய்து வருகின்றனா். நேரடி ரயில்களில் இடம் கிடைக்காதவா்கள் சென்னைக்கு சென்று அங்கிருந்து கொல்கத்தா மாநிலம், ஹவுரா மாா்க்கமாகச் செல்லும் ரயில்கள் மூலம் அஸ்ஸாம் செல்லத் திட்டமிட்டுள்ளனா்.

அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டங்களாக ஏப்ரல் 23, 29-ஆம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால் அந்த மாநிலத் தொழிலாளா்களும் ஊருக்குச் செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனா்.

ஜனநாயக கடமையாற்ற செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.