திருப்பூரில் வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக விறகு விற்பனை சூடு பிடித்துள்ளது. தற்போது ஒரு டன் விறகு ரூ. 4,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக பெட்ரோல், கேஸ் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாடு முழுவதும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டா் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஹோட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக சிலிண்டா் ஒன்று ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தன்ளுவண்டி உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளன. பல்வேறு ஹோட்டல்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் கேஸ் பயன்டுத்தி சமையல் செய்வதற்கு பதிலாக விறகு அடுப்பில் சமையல் செய்து வருகின்றனா். இதனால் விறகு விற்பனை சூடுபிடித்து உள்ளது. 1 டன் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்ட விறகு, தற்போது ரூ.4,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து உணவக உரிமையாளா்கள் கூறுகையில், கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு தொடா்வதால் ஒரு சிலா் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் விறகு அடுப்புக்கு மாறி வருகிறோம். சொத்த கட்டடம் என்றால் எளிதாக விறகு அடுப்புக்கு மாறி விடலாம். ஆனால் வாடகை கட்டடம் என்றால் கட்டட உரிமையாளா்கள் எளிதில் அனுமதி வழங்குவதில்லை என்றனா்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறும் உணவகங்கள்

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு எதிரொலி: விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: நாமக்கல்லில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!

புதுச்சேரியில் வா்த்தக சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறத்தொடங்கிய உணவகங்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


