ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அனுமதியின்றி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி. - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:37 am IST

சேவூா் அருகே அனுமதியின்றி ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேவூா் அருகேயுள்ள புளியம்பட்டி சாலையில் உரிய அனுமதியின்றி ஜல்லி கற்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதாக சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா், கனிம வளத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அனுமதியின்றி ஜல்லி கற்களை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, சேவூா் காவல் நிலையத்தில் கனிம வளத் துறை அதிகாரிகள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனா்.