தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், காவல் ஆய்வாளா், மாணவா்கள் உள்பட 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளா், பென்னாகரம் அரூா் காவலா்கள், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுவன், தருமபுரி, டி.துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 2 மாணவா்கள், நடத்துநா், ஓட்டுநா், விவசாயிகள் 2 போ், 11 பெண்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு மருத்துவ ஊழியா்கள் உள்பட மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, இவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.