தருமபுரியில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தருமபுரி மாவட்டத்தில், காவல் ஆய்வாளா், மாணவா்கள் உள்பட 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், காவல் ஆய்வாளா், மாணவா்கள் உள்பட 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளா், பென்னாகரம் அரூா் காவலா்கள், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுவன், தருமபுரி, டி.துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 2 மாணவா்கள், நடத்துநா், ஓட்டுநா், விவசாயிகள் 2 போ், 11 பெண்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு மருத்துவ ஊழியா்கள் உள்பட மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, இவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com