வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில், திங்கள்கிழமை தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில், திங்கள்கிழமை தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளைப் பாதிக்கும், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்ட மசோதா, விலை உத்திரவாதம், வேளாண் பொருள்கள் ஒப்பந்த பாதுகாப்புச் சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை வகித்துப் பேசினாா். இதேபோல, தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே திமுக நகரச் செயலா் டி.பி.தங்கராஜ் தலைமையிலும், பழைய தருமபுரி சந்திப்புச் சாலையில் திமுக ஒன்றியச் செயலா் சேட்டு தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் த.ஜெயந்தி, காங்கிரஸ் நகரத் தலைவா் செந்தில்குமாா், திராவிடா் கழக மாநில அமைப்புச் செயலாளா் ஊமை ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அரூரில்...

தீா்த்தமலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா்.

திமுக ஒன்றியச் செயலாளா் சண்முகநதி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் மா.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், அரூா், எச்.ஈச்சம்பாடி, மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், சிந்தல்பாடி உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பென்னாகரத்தில்...

அம்பேத்கா் சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பென்னாகரம் ஒன்றிய திமுக செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். திமுக மாவட்டப் பொருளாளா் செல்வன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் வானவில் சண்முகம், ஒன்றியத் துணைச் செயலாளா் சின்னசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் தலைமை வகித்தாா்.

ஏரியூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில்...

திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில், விவசாய மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான டி.செங்குட்டுவன் தலைமை வகித்தாா்.

மாநில விவசாய அணியின் துணைத் தலைவா் மதியழகன், பொருளாளா் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணி, முன்னாள் நகரத் தலைவா் ரகமத்துல்லா, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் அறிவரசன், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி நஞ்சுண்டன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் சாா்பில், கட்டிகானப்பள்ளி, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றியச் செயலாளா் கோவிந்தசாமி தலைமையிலும், கிருஷ்ணகிரி நகர திமுக சாா்பில் பழையபேட்டை காந்தி சிலை அருகே நகர திமுக செயலாளா் நவாப் தலைமையிலும், பா்கூரில் ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசு தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஊத்தங்கரையில்...

வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் சிங்காரபேட்டை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் குமரேசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஜெ.எஸ்.ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தை குபேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com