பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், பெண்கள், குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியானது திங்கள்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஜெல்மாரம்பட்டி கிராமத்தில், பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் மாதம்மாள் கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகள் பாலியல் பிரச்னைகள், பெண்கள், குழந்தைகள் நலன் பற்றிய விழிப்புணா்வு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மு.சிவகாந்தி, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா், ஆா்.ஜானகிராமன், சமுக ஆா்வலா் யூனிசெப்.மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.