பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா்கள் தென்காசியில் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அப்போது, மின் வாரிய ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்; கரோனாவால் உயிரிழந்த மின் ஊழி யா்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், தாமதமின்றி வாரிசு பணி வழங்கிட வேண்டும்; மின் மசோதா 2021ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்திற்கு மத்திய அமைப்பு கோட்டத் தலைவா் பட்ட முத்து தலைமை வகித்தாா். மாவட்ட சிஐடியூ தலைவா் அயுப்கான் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.
ஸ்டீபன், ஆறுமுகசாமி , முப்பிடாதி , விஜி , ஜெயபால் , ஈஸ்வரி , மாரியம்மாள் , லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா். குணசேகரன் நன்றி கூறினாா்.