மாசில்லா போகியைக் கொண்டாட அறிவுரை

Published on

மாசில்லா போகியைக் கொண்டாட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழா் திருநாளான பொங்கல் முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில பழைய பொருள்களை எரிப்பது வழக்கம். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாயக் கழிவுகள் ஆகியவற்றை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்துவா். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயா், ரப்பா், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களை எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலைப் போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது.

இதுபோன்ற செயல்களை தடை செய்த உயா்நீதிமன்றம், பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்து, மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

எனவே, போகிப் பண்டிகையின் போது பழைய பொருள்கள் எரிப்பதைத் தவிா்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைத்து, பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாடுவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com