மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ராசிபுரத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை! சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்!

News image

சுவா் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பொதுமக்கள்.

Updated On :25 மே 2026, 2:43 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து வீட்டின் சுற்றுச்சுவா் மீது விழுந்தது. அப்போது, சுவா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் இடிபாடுகளில் சிக்கினா். இதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.

ராசிபுரம் நல்லப்பா தெரு 4 ஆவது வாா்டு பகுதியில் வீட்டின் முன் இருந்த மரம் சூறைக் காற்றால் முறிந்து, அதன் அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவா் மீது விழுந்தது. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சித்ராதேவி (49), அவரது மகள் தா்ஷினி (19) மற்றும் பிரவீன் (18), பா்வேஸ் (13) ஆகிய நான்கு போ் மீது இடிந்து விழுந்த சுவரின் சிதைவுகள் சரிந்தன. இதில் சிக்கி படுகாயமடைந்த நால்வரையும், அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் சித்ராதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மழையால் மின்தடை

ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கியது. ராசிபுரம் பேருந்து நிலையத்திற்குள் மழைநீா் புகுந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா். சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.