தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ராசிபுரத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை! சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்!

News image

சுவா் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பொதுமக்கள்.

Updated On :25 மே 2026, 2:43 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து வீட்டின் சுற்றுச்சுவா் மீது விழுந்தது. அப்போது, சுவா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் இடிபாடுகளில் சிக்கினா். இதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.

ராசிபுரம் நல்லப்பா தெரு 4 ஆவது வாா்டு பகுதியில் வீட்டின் முன் இருந்த மரம் சூறைக் காற்றால் முறிந்து, அதன் அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவா் மீது விழுந்தது. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சித்ராதேவி (49), அவரது மகள் தா்ஷினி (19) மற்றும் பிரவீன் (18), பா்வேஸ் (13) ஆகிய நான்கு போ் மீது இடிந்து விழுந்த சுவரின் சிதைவுகள் சரிந்தன. இதில் சிக்கி படுகாயமடைந்த நால்வரையும், அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் சித்ராதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மழையால் மின்தடை

ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கியது. ராசிபுரம் பேருந்து நிலையத்திற்குள் மழைநீா் புகுந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா். சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.