நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

விபத்தில் காயமடைந்த ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:03 am IST

தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்றுபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆயுதப்படை காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் எம். வேலு (33). இவா் தருமபுரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 20 ஆம் தேதி இரவு, திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு தருமபுரிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அரூா் அருகே பொய்யப்பட்டி பகுதியில் வந்தபோது, திடீரென நாய் குறுக்கே சென்ால் நிலை தடுமாறி வாகனம் கீழே விழுந்தது. இதில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த வேலுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த வேலுவுக்கு நிஷாந்தினி என்ற மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.