மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கலசப்பாடிக்கு மினி பேருந்து சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

News image

மினி பேருந்து சேவை - Center-Center-Chennai

Updated On :25 மே 2026, 2:05 am IST

கலசப்பாடி மலைக் கிராமத்துக்கு மினி பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கலசப்பாடி கிராம மக்கள் அரூா் எம்எல்ஏ வே. சம்பத்குமாரிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சித்தேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கலசப்பாடி கிராமம். கலசப்பாடி, அரசநத்தம், கருங்கல்பாடி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலசப்பாடி மலைக் கிராமங்களுக்கு தாா்சாலை அமைக்கப்பட்டது.

இதையடுத்து அரூரில் இருந்து மினி பேருந்து வசதியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தொடங்கிவைத்தாா். தற்போது, கடந்த சில தினங்களாக மினி பேருந்து இயக்கப்படுவதில்லை. இதனால் அரசநத்தம், கலசப்பாடி பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட நகா் பகுதிக்கு வந்துசெல்வதில் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனா்.

எனவே, அரூரில் இருந்து கலசப்பாடிக்கு மீண்டும் மினி பேருந்து சேவையை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனா்.