மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:49 am IST

தருமபுரி அருகே பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கேத்தனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கு. ஆரோக்கியசாமி (57). இவா் கடந்த 16 ஆம் தேதி தனது நிலத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவரை ஒரு விஷப்பாம்பு தீண்டியுள்ளது.

இதையடுத்து அவா் தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.