மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

விபத்தில் காயமடைந்த ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:03 am IST

தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்றுபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆயுதப்படை காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் எம். வேலு (33). இவா் தருமபுரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 20 ஆம் தேதி இரவு, திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு தருமபுரிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அரூா் அருகே பொய்யப்பட்டி பகுதியில் வந்தபோது, திடீரென நாய் குறுக்கே சென்ால் நிலை தடுமாறி வாகனம் கீழே விழுந்தது. இதில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த வேலுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த வேலுவுக்கு நிஷாந்தினி என்ற மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.