மேட்டூர், ஜன. 8: சேலம் மாவட்டம் மேச்சேரியில் தக்காளி விலை திடீரென சரிந்துள்ளது.
மேச்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாணாவாரியாகவும், இறைவைப் பயிராகவும் தக்காளி பயிரிடப்படுகிறது. சமையலுக்கு மேச்சேரி தக்காளி தனி ருசியைக் கொடுப்பதாகக் கூறப்படுவதால், நல்ல கிராக்கி இருந்து வருகிறதி.
தற்ப்போது இங்கு தக்காளியின் சீசன் களைகட்டி உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், வெளியூர் மொத்த வியாபாரிகள் வராததாலும் தக்காளி விலை 15 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.250 வரை விற்கப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.215 முதல் ரூ.225 வரை விற்கப்படுகிறது.
தக்காளி சீசனில் மேச்சேரி வட்டாரத்தில் மூன்று மாதங்களுக்கு 5ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.