தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதம்
வெற்றி பெறப் பாடுபடுவோம் என்று அனைத்து உலக எம்ஜிஆர் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தருமபுரியில், சனிக்கிழமை மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது .
மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் வரவேற்றார். எம்ஜிஆர் மன்றச் செயலர் அ.தமிழ்மகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் கோ.செல்வம், துணைச் செயலர்கள் இரா.ராஜேந்திரன், க.தவசி, பாண்டியன், எம்எல்ஏக்கள் பி.பழனியப்பன், ஆர்.ஆர்.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.
விவசாயக் கடன் தள்ளுபடி, 500 மதுக் கடைகள் மூடல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு வாக்குறுதிகளைச் செயல்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது, தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், சிப்காட் தொழில்பேட்டை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களில் 100 சதம் அதிமுக வெற்றி பெற ஒருங்கிணைந்து பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.