• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

கான்கிரீட் தடுப்புகளை சேதப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள்!  

By தருமபுரி,  |   Published on : 22nd November 2016 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

s15

கொடிக் கம்பங்களை வைப்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள கான்கிரீட்டால் ஆன நடுத் தடுப்புக் கட்டையை (சென்டர் மீடியன்) உடைத்துச் சேதப்படுத்தும் அரசியல் கட்சியினரின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சாலைகளில் வருவோர்- போவோரைத் தடுத்துப் பிரிக்க நடுவே 3 அடி உயரமுள்ள தடுப்புக் கட்டைகள் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.
 தனித்தனியே கான்கிரீட் அமைப்பில் தயாரிக்கப்பட்ட இந்தக் கட்டைகள் சாலையில் வைக்கப்பட்ட பிறகு சிமெண்ட் கலவை கொண்டு ஒட்டப்படுகின்றன. நடுவே மின் விளக்குக் கம்பங்கள் அமைப்பதற்காக மட்டும் ஆங்காங்கே சிறுபகுதி வெட்டி எடுக்கப்பட்டு அப்பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்படும்.
 இவ்வகையான கான்கிரீட் தடுப்புக் கட்டைகளால் சாலை விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் குறைவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது விழாக்களுக்கு விவிஐபிக்கள் வரும்போது சாலையின் நடுவே கொடிக் கம்பங்களை அமைக்கின்றனர்.
 தற்போது கான்கிரீட் தடுப்புகளுக்கேற்ப இரும்புக் குழாய்களில் "கப்லிங்க்' அமைத்து கொடிக் கம்பங்கள் பொருத்தப்படுகின்றன.
 இவற்றை பொருத்துவதற்கேற்ப இந்தத் தடுப்புகளின் நடுவே சிறிய அளவிலான துளைகளும் இயல்பாகவே உள்ளன.
 துளைகளில் எளிதாக "நட்டு' போட்டு முடுக்கிக் கொள்ளும் அரசியல் கட்சியினர், விழா முடிந்தவுடன் அகற்றிக் கொள்கின்றனர். இதற்கு முறைப்படி அனுமதி பெறுகிறார்களா? இல்லையா? என்பது ஒரு புறம் இருந்தாலும், தடுப்புகளை தங்களது தேவைக்கேற்ப உடைத்துக் கொள்ளும் செயலும் நடைபெறுவதுதான் சிக்கல்.
 இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
 அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்களை அமைப்பதற்கு ஒரு காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வழங்குவதில்லை. கான்கிரீட் தடுப்புகளுக்கு நடுவே உள்ள சிறு துளைகள், அந்த கான்கிரீட் அமைப்புகளை தூக்கி வருவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 லேசான உடைப்புகள் ஏற்பட்டாலே காலப்போக்கில் இந்த கான்கிரீட் தடுப்புகள் முற்றிலும் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 எனவே, சாலைகளின் நடுவே அரசியல் கட்சியினர் தங்களது கொடிகளைக் கட்டுவதற்கு முழுமையான தடை விதிப்பதுடன், அவ்வாறு அமைப்பவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்