பாப்பிரெட்டிப்பட்டி அருகே மணல் கடத்தியதாக புதன்கிழமை 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.
அ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளர் ஆ.முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சர்க்கரை ஆலை-தென்கரைக்கோட்டை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மணல் லாரி ஓட்டுநர் ஜெ.கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிரெட்டி மகன் மஞ்சுநாத் (23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ஒசூர் பெரியார் நகரைச் சேர்ந்த ஜெயராம் மகன் பால்ராஜ், ராமகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.
இதையடுத்து, அரசு அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.