அரூரில் ஜமாபந்தி முகாம் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரூர் வருவாய் வட்டத்தின் வருவாய்த் தீர்வாய கணக்குகள் முடிப்பதற்கான (ஜமாபந்தி) முகாம் கடந்த 7 நாள்கள் நடைபெற்றது.
இதில், முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 745 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 358 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை ஆணை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கே.பாலசுப்பிரமணியன் வழங்கினார்.
இந்த முகாமில், வட்டாட்சியர் அ.செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் கனிமொழி, தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயசெல்வன், வருவாய் ஆய்வாளர் ஆ.சிவஞானம், பி.ரஞ்சித்குமார், சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தணிகாசலம், ஆறுமுகம், வே.வெங்கடேசன், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.