தனியார் பேருந்து தீப்பிடித்து சேதம்

அரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து தீப்பிடித்து சேதம் அடைந்தது.
Published on
Updated on
1 min read

அரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து தீப்பிடித்து சேதம் அடைந்தது.
 அரூர் வழியாக சேலம்-திருப்பத்தூர் செல்லும் ஒரு தனியார் பேருந்து புதன்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பத்தூரிலிருந்து அரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எச்.ஈச்சம்பாடி எனுமிடத்தில் வரும்போது பேருந்தின் அடிப்பகுதியில் திடீரென தீப்பற்றி புகையுடன் எரிந்தது. இதை அறிந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com