சித்தேரியில் மரங்கள் வெட்டி கடத்தியதாக மூன்று பேரை வனத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
சித்தேரி ஊராட்சி, பேரேரி புதூர் வனப்பகுதியில் அரூர் வனச்சரகர் ஜி.தங்கராஜ் தலைமையில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் 3 பேர் பல வகை மரங்களை வெட்டி கடத்திச் செல்வது தெரியவந்தது.
அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் பேரேரிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (55), ராமர் (35), அண்ணாமலை (55) என்பது தெரியவந்தது. மூன்றுபேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.