அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை இ.ஆர்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
வணிகவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் மத்திய, மாநில அரசுகள் சார்ந்த வேலைவாய்ப்புகள், வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான வழிமுறைகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிகள், உயர் கல்வியின் அவசியம் குறித்து ஆதிநாராயணன் பேசினார்.
இதில், இ.ஆர்.கே கல்லூரியின் முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் சி.அருள்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மணிகண்டன், உதவிப் பேராசிரியர்கள் ச.மணி, அமுதா, கவிதா, செவ்வந்தி, இன்பசேகர், மஞ்சு, ரம்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.