அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் ஊராட்சி பறையப்பட்டியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், புதிய குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், அரசு நகர் பேருந்து வசதி, தெருவிளக்கு, இலவச அரசு தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 32 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 7 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில், வட்ட வழங்கல் அலுவலர் மணி, வருவாய் ஆய்வாளர் சுதேஸ்வரி, ஊராட்சி செயலர் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.