மோதூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

காரிமங்கலத்தை அடுத்த பூமாண்டஅள்ளி ஊராட்சி மோதூர்- சென்றாயம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரிமங்கலத்தை அடுத்த பூமாண்டஅள்ளி ஊராட்சி மோதூர்- சென்றாயம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் போதிய பராமரிப்பு பணிகள் இல்லாததால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. ராமியம்பட்டி, மோதூர், மேக்கனாம்பட்டி, போலம்பட்டி, போத்தாபுரம், காமலாபுரம் பகுதிகளிலிருந்து  மாட்லாம்பட்டி செல்வதற்காக இச் சாலையைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, சேதமடைந்துள்ளதால் அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com