மொரப்பூர் அருகே வனப்பகுதியில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கர்த்தான்குளம் வனப்பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மொரப்பூர் போலீஸார் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இது குறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.