பெட்ரோல் விலை உயர்வுக்கு தேசிய லீக் கண்டனம்

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வுக்கு இந்திய தேசிய லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வுக்கு இந்திய தேசிய லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்றும்,  அதேபோல, எவ்வித விசாரணையும் முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஏ. சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ.கே. கலாம் வரவேற்றார். பொருளாளர் எம். ஜலால் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com