கடத்தூர் ஐடிஐயில் குறுகிய கால தையல் பயிற்சி

தருமபுரி மாவட்டம், கடத்தூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) குறுகிய கால தையல் மற்றும் நிட்டிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டம், கடத்தூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) குறுகிய கால தையல் மற்றும் நிட்டிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.
18 முதல் 40 வயதுக்குள்பட்ட பள்ளிப் படிப்பை முடித்த, நிறுத்திய, வேலைதேடுவோர் இரு பாலரும் இதில் சேரலாம். தினமும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மாதம் இப்பயிற்சி நடைபெறும். குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50, சேர்க்கைக் கட்டணம் ரூ.100. பயிற்சி இலவசம். 40 இடங்களுக்கான சேர்க்கை செப். 15-ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ளோர் செப். 31-ஆம் தேதி வரை நேரில் வந்து சேரலாம் என தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com