தருமபுரி மாவட்டம், கடத்தூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) குறுகிய கால தையல் மற்றும் நிட்டிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.
18 முதல் 40 வயதுக்குள்பட்ட பள்ளிப் படிப்பை முடித்த, நிறுத்திய, வேலைதேடுவோர் இரு பாலரும் இதில் சேரலாம். தினமும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மாதம் இப்பயிற்சி நடைபெறும். குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50, சேர்க்கைக் கட்டணம் ரூ.100. பயிற்சி இலவசம். 40 இடங்களுக்கான சேர்க்கை செப். 15-ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ளோர் செப். 31-ஆம் தேதி வரை நேரில் வந்து சேரலாம் என தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.