உடைந்த குடிநீர்க் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், ஏலகிரி ஊராட்சி பழனிகவுண்டன் கொட்டாய் குடிநீர்த் தொட்டி அருகிலுள்ள பழுதடைந்த குழாய்களை சீரமைத்து தர வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தருமபுரி மாவட்டம், ஏலகிரி ஊராட்சி பழனிகவுண்டன் கொட்டாய் குடிநீர்த் தொட்டி அருகிலுள்ள பழுதடைந்த குழாய்களை சீரமைத்து தர வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இச்சங்கத்தின் நல்லம்பள்ளி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக்கு நல்லம்பள்ளி ஒன்றியத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்று கலந்து கொள்ளச் செய்வது. நல்லம்பள்ளி முதல் இலளிகம் வரையுள்ள கோவிலூர் ஏரிக்கரை, நார்த்தம்பட்டி ஏரிக்கரை ஆகியவற்றில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
தின்னகொல்லகொட்டாயில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு கறவைமாடுகள் வாங்குவதற்கு கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியக் குழுத் தலைவர் எல்.சி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன், மாவட்டத் தலைவர் ஜி. மாதையன் உள்ளிட்டோரும் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com