அ.பள்ளிப்பட்டியில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் தேர்தல் பிரசாரம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டியில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டியில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் அதிமுக கூட்டணிக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து, அ.பள்ளிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என வலியுறுத்தி இந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் அருள் ஆறுமுகம், கே.பழனியப்பன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com